தமிழ்ப் புத்தாண்டு - டிடிவி தினகரன் வாழ்த்து!!

 
ttv

சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை  தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று தொடங்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதைக்கு ஏற்ப உலகிலேயே பழமையான, பண்பட்ட, பைந்தமிழ் மொழியான தமிழ்மொழியை, தாய்மொழியாக கொண்டிருக்கும் தமிழக மக்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் ஆண்டாக இத்தமிழ்ப் புத்தாண்டு அமையட்டும்.

ttv dhinakaran

இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம், நாள்தோறும் அரங்கேறும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள், வேலைவாய்ப்பின்மை என எண்ணற்ற நிர்வாகச் சீர்கேடுகளால் உருக்குலைந்து, இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் வெளிச்சத்தை பாய்ச்சும் ஆண்டாக இப்புத்தாண்டு அமைய நாம் அனைவரும் உறுதியேற்போம்.

ttv

மலரும் தமிழ்ப்புத்தாண்டு, தமிழக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நம்பிக்கையையும், நல்வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.