"அஞ்சல்துறை சேமிப்புக் கணக்கு படிவங்களில் தமிழ் இடம்பெற வேண்டும்" : சு.வெங்கடேசன் எம்.பி.கோரிக்கை!!

 
ttn

அஞ்சல்துறை சேமிப்புக் கணக்குகளில்  பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்குமான படிவங்களில் தமிழ் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அஞ்சல் துறையில் பணவிடை தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்தது . ஆனால் மின்னணு படிவங்கள் வந்தவுடன் இடையில் தமிழுக்கு விடை கொடுக்கப்பட்டது. சேமிப்புக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படங்களும் தமிழில் இருந்தன, தற்போது இல்லை.அலைபேசிகளில் தமிழ் எழுத்துக்களை பதிவிறக்கம் செய்து பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் பரவலாக நடைமுறையில் உள்ளது. வணிக நோக்கங்களுக்காக பெரிய தனியார் நிறுவனங்கள் கூட தமிழில் உரையாட தமிழில் செய்தி பரிமாற தொழில்நுட்ப ஏற்பாடுகளை தருகிறார்கள். ஆனால் ஒரு அரசுத்துறை சாதாரண மக்களின் இதய காலமாக விளங்க வேண்டிய துறை .மக்கள் சேவை என்ற நோக்கில் இருந்தும் செய்யவில்லை. லாப நோக்கில்  கூட செய்யவில்லை என்றால் அலட்சியம் என்பதா? பாரபட்சம் என்பதா?திணிப்பு என்பதா?

venkat

முதலாவதாக நமது தேசம் மொழி பன்மைத்துவம் வாய்ந்தது .அரசு அலுவலகங்கள் இந்த பேருண்மையை உள்வாங்கி தங்களை அணுகும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை எளிதில் பெற வழிவகை செய்ய வேண்டும்.இரண்டாவதாக வாடிக்கையாளர்கள் ஒரு சேவையை பெறும் போது அதற்கான விதிகளை நிபந்தனைகளை முழுமையாக அறிந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுவே எந்த ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படைத் தேவையாகும் , அவர்கள் அஞ்சல் சேமிப்புகளை எடுக்கும் போது இரு தரப்பினருக்கும் உள்ள பொறுப்புகள் தெளிவாய் பகிரப்பட வேண்டும். இல்லையெனில் பின்னர் சிக்கல்கள் எழும் இதில் வாடிக்கையாளர்களை கடைசியில் பலியாவார்கள்.


மூன்றாவது இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழிகளில் சேவையை தருவது ஒன்றிய அரசு நிறுவனங்களின் கடமை ஆகும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். சாதாரண குடிமகன் வழக்கு விவரங்களை தெரிந்து கொள்ளும் சூழல் உருவாக்கப்படும் முறைமை மீது நம்பிக்கையை உருவாக்கும் என்பதே அவர் கருத்தின்  சாரம். எனவே வாடிக்கையாளர் சேவை தொடர்பான எல்லா வடிவங்களும் பணவிடை சேமிப்புக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படங்கள் உட்பட தமிழில் இருப்பதையும் அதற்கேற்ற தொழில்நுட்ப ஏற்பாட்டை இணைய வழியில் தருவதையும் உறுதி செய்ய வேண்டுகிறேன் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.