அளவீடில்லாத அன்புக்கு சொந்தக்காரர் கேப்டன் விஜயகாந்த் - தமிழச்சி

 
தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழ் மக்களுக்காக கர்ஜித்த  விஜயகாந்த் குரல் என்றும், எல்லோர் செவிகளிலும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும் என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி | Tamil News Vijayakanth  hospilized

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவி்த்துள்ள தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவர் - தமிழ்த் திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த, மிகச் சிறந்த மனிதநேயப் பண்பாளர், புரட்சி கலைஞர் மதிப்புமிகு. 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள், மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன் ! தமிழ் மக்களுக்காக கர்ஜித்த அந்த குரல் என்றும், எல்லோர் செவிகளிலும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும் !


முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருக்கு, 1996 ஆம் ஆண்டு, தமிழ்த் திரை உலகின் சார்பில், மிகப் பெரிய விழா எடுத்து, தங்க பேனா பரிசளித்தது கலைஞர் மீதும், தமிழ் மொழி மீதும் அவர் கொண்டிருந்த காதலின் வெளிப்பாடின்றி வேறில்லை! தமிழ் மக்களின் அளவீடில்லாத அன்புக்கு சொந்தக்காரரான கேப்டன் விஜயகாந்த், அவரின் மனிதநேயச் செயல்களால், என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், அன்பர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் அனுதாபமும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.