தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து அமிஷ் ஷாவிடம் பேசினேன் - அண்ணாமலை

 
Annamalai

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டணி நிலைப்பாடு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர் கூறியதாவது: தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். பாஜகவுக்கு எனக்கும் தனிப்பட்ட தலைவர்கள், கட்சி மீது மோதல் இல்லை. பாஜக வேகமாக வளர வேண்டும் என நாங்கள் சில முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். கட்சியை வலுப்படுத்த நினைக்கும் போது ஒரு சில மனஸ்தாபங்கள் வருவது வழக்கம் தான். கட்சிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பாஜக வளர வேண்டும் என்பதே நோக்கம். 

கூட்டணி குறித்து மத்திய குழு தான் முடிவு செய்யும். கூட்டணியில் இருந்தாலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சி வளர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதுபோல் தான் பாஜகவும் வளரவேண்டும் என நினைக்கிறது. இவ்வாறு அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.