பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது - அண்ணாமலை பேட்டி

 
Annamalai

சென்னை வரும் பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்நிலையில், பிரதமரின் தமிழகம் வருகை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  பிரதமர் மோடியை யாரெல்லாம் பார்க்க வேண்டும் என எங்கள் மூலமாக கேட்டிருக்கின்றார்களோ அவர்கள் விவரங்களை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம். பிரதமர் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் தான் இறுதி முடிவு செய்யும். தமிழகத்தில் இருந்து யாரெல்லாம் பிரதமரை பார்க்க வேண்டும் என விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரையும் பிரதமர் பார்க்கத்தான் போகிறார். 

பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளது. அதனால் பிரதமர் மோடியின் ஒவ்வொரு வருகையும் எழுச்சி தான். பிரதமர் மோடி அடுத்து தமிழகத்தில் வேறு வேறு பகுதிகளுக்கு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. பிரதமர் அவர்கள் எப்போதுமே தமிழர்களின் நலனை அவரது இதயத்தில் வைத்துள்ளார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பிரதமர் மோடி சென்னை வருவது மிகப்பெரிய விழாவாக இருக்கும். எல்லோருக்கு ஆனந்தம். இவ்வாறு அவர் கூறினார்.