சென்னை அணியின் வெற்றிக்கு பாஜக தான் காரணம் - அண்ணாமலை புது டுவிஸ்ட்!
சென்னை அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல பாஜகவை சேர்ந்த ஜடேஜா தான் காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நேற்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பில்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே மழையின் காரணமாக ஆட்டத்தை பாதியிலேயே நிறுத்தியது. பின்னர் சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று அறிவித்த நிலையில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்று நிலை ஏற்பட்டது. ஐந்தாவது பந்தை ஜடேஜா சிக்ஸர் ஆக மாற்றினார் . இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் கடைசி பந்தை பவுண்டரியாக்கி வெற்றியை சிஎஸ்கே வசப்படுத்தினார். இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி.ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்!
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 30, 2023
பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்
- மாநில தலைவர்
திரு.@annamalai_k#CSK #Annamalai #9YearsOfSeva pic.twitter.com/zvy6B2eUlg
இந்நிலையில், சென்னை அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல பாஜகவை சேர்ந்த ஜடேஜா தான் காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி.ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்!. பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.