சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 
mk Stalin cp radhakrishnan

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   

 குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டார்.   அதன்படி மகராஷ்டிரா மாநில புதிய ஆளுநராக ரமேஷ் பாசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திரா ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர ஆளுநராக இருந்த ஹரிச்சந்தன் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஸ்ரீ அனுசுயா மணிப்பூர் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இமாச்சல் ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர், பீகார் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். பீகார் மாநில ஆளுநர் சவுகான், மேகாலயா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் அருணாச்சல பிரதேச ஆளுநராக கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக், சிக்கிம் ஆளுநராக லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, ஜார்கண்ட் ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன், அசாம் ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா, ஹிமாச்சல பிரதேச ஆளுநராக சிவ பிரதாப் சுக்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் நாகாலாந்து ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.