தொட்ட துறை அனைத்திலும் சிகரம் தொட்ட மாநிலம் தமிழ்நாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 
stalin

மாநில உரிமைகளை நிலைநாட்டுவது அரசியல் முழக்கம் அல்ல என திருச்சி விமான புதிய முனையம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதித்டாக கட்டப்பட்டுள்ள முனையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியிடம் விளக்கி கூறினார்.  60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகள் கொண்ட இந்த புதிய விமான முனையம், ஒரே நேரத்தில் 5,500 பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

modi

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்த மோடிக்கு நன்றி.  திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும். தொட்டதுறை அனைத்திலும் சிகரம் தொட்ட மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கான பேரிடர் நிவாரண நிதியை விரைவாக வழங்க வேண்டும்.  மாநில உரிமைகளை நிலைநாட்டுவது அரசியல் முழக்கம் அல்ல. தொட்டதுறை அனைத்திலும் சிகரம் தொட்ட மாநிலம் தமிழ்நாடு என கூறினார்.