தோழி விடுதிகள்....இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 
stalin

திராவிட மாடலின் தோழி விடுதிகள் வரலாற்றின் பக்கங்களில் நிலைக்கொள்ளும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பணிபுரியும் பெண்களுக்கு உதவும் விதமாக தமிழ்நாடு அரசானது மகளிர் தங்கும் விடுதிகளை தொடங்கியுள்ளது.  வேலைக்காகவும், பயிற்சிக்காகவும், உத்தியோகபூர்வ வருகைக்காகவும் செல்லும் பெண்களின் தங்குமிடத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு சிறப்பு முயற்சியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தோழி விடுதி என்று அழைக்கப்படும் இவ்விடுதி பெண்களுக்கு பாதுகாப்பான, மலிவு விலையில் அமைக்கப்பட்டுள்ளது. தினசரி மற்றும் மாதாந்திர அடிப்படையில் தோழி விடுதிகளில் அறைகளை பதிவு செய்தும் கொள்ளலாம்.  இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், தோழி விடுதிகள் முன்னேறும் மகளிருக்கான முகவரி என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,  மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது! டாக்டர் நடேசனாரின் 'திராவிடர் இல்லம்' போல், நமது திராவிட மாடலின் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைக்கொள்ளும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.