குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.ஐ-க்கு முதலமைச்சர் பாராட்டு!

 
stalin

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய பென்னாலூர்பேட்டி காவல் உதவி ஆய்வாளருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மதுரையை சேர்ந்தவர் பரமசிவம் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களிடம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்து வருகிறது. இதேபோல் அவர் எங்கு சென்றாலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. 



 
இந்நிலையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய உதவி ஆய்வளர் பரமசிவத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பரமசிவம் குறித்து செய்திதாளில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ள அவர் அது தொடர்பாக கூறியுள்ளதாவது:   குற்றங்களை தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல, நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்தை வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.