ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது

 
fishermen

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு பகுதிகளுக்கு அருகே செல்கின்றனர். அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து செல்கின்றனர். இதேபோல் மீனவர்களின் படகு மற்றும் அவர்களது மீன்களையும் பறிமுதல் செய்கின்றனர். 

இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தான் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவ பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.