காவி உடையில் திருவள்ளுவர்....ஆளுநர் ஆர்.என்.ரவியின் திருவள்ளுவர் தின வாழ்த்து....

 
காவிச்சாயம் அடித்தால் திருவள்ளுவர் மதம் மாறிவிட மாட்டார் - வைரமுத்து.. 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காவி உடையில் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுவர் தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக ஆளுநர் மாளிகையின் சமூக வலைதள பக்கத்தில் காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை பதிவிட்டு, திருவள்ளுவர் தின வாழ்த்து பதிவிடப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அந்த பதிவில், திருவள்ளுவர் தினத்தில்,  ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை  செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும்  உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.