சுயசார்பு பாரதத்தை உருவாக்குவதில் நேதாஜி என்றும் ஊக்க சக்தியாக இருப்பார் - ஆளுநர் ஆர்.என்.ரவி
சுயசார்பு பாரதத்தை உருவாக்குவதில் நமது நாட்டின் இளைஞர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்றும் ஊக்க சக்தியாக இருப்பார் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில், "பராக்கிரம தினத்தில், இந்திய தேசிய ராணுவத்திற்கு தலைசிறந்த தலைமையை வழங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, அவர்களின் வலிமைக்கு சவால் விடுத்த மாபெரும் தொலைநோக்கு புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்துகிறது. 1946-ம் ஆண்டு பிப்ரவரியில் கடற்படைக் கிளர்ச்சிக்கு வழிவகுத்த சுதந்திரத்துக்கான சீருடை அணிந்த ஆயிரக்கணக்கான இந்திய ஆண்களையும் பெண்களையும் நேதாஜி ஊக்குவித்தார்.
"பராக்கிரம தினத்தில், இந்திய தேசிய ராணுவத்திற்கு தலைசிறந்த தலைமையை வழங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, அவர்களின் வலிமைக்கு சவால் விடுத்த மாபெரும் தொலைநோக்கு புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்துகிறது. 1946-ம் ஆண்டு பிப்ரவரியில்… pic.twitter.com/FxGnEvZx50
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 23, 2024
விமானப்படையில் கிளர்ச்சிகள் மற்றும் ஆங்கிலேயரின் ஆயுதப் படைகளில் உள்ள மற்ற இந்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறும் கட்டாயத்தை ஆங்கிலேயருக்கு ஏற்படுத்தினர். சுயசார்பு பாரதத்தை உருவாக்குவதில் நமது நாட்டின் இளைஞர்களுக்கு அவர் என்றும் ஊக்க சக்தியாக இருப்பார் என ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.