இந்த 3 மாவட்டங்களில் புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பு - அமைச்சர் அதிர்ர்சி தகவல்!

 
ma Subramanian

ஈரோடு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

உலக கைகழுவும் தினத்தையொட்டி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கைகழுவுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு கைக்கழுவுதல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இன்றைக்கு கொரோனா உள்ளிட்ட பல்வேறு தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக இருப்பது, முறையாக கைகளை கழுவாமல் இருப்பதுதான். சோப்பு போட்டு நல்ல முறையில் கைகளை கழுவுவதால் 70 சதவீதம் நம்மால் தொற்று நோய்களிலிருந்து தப்பிக்க முடியும். 

ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் விரைவில் ஆய்வு நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.