நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!!

 
rain

வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக இன்று மற்றும் நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வருகிற 18 மற்றும் 19ம் தேதிகளில் தென்மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

rain

வருகிற 20-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை .காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். 

rain

இன்று முதல் 20-ஆம் தேதி வரை குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை முதல் 19ஆம் தேதி வரை பூமத்திய ரேகையை ஒட்டி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும். நாளை தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது