உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

 
karur rain

வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், புதுக்கோட்டை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் தென் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் , ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

rain

நாளை முதல் 19ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்கள் மற்றும் புதுவை .காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை  ஒட்டியிருக்கும்.

rain

வரும் 17ஆம் தேதி தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இன்று மற்றும் 19ஆம் தேதி குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் இன்று மற்றும் நாளை இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

rain

 வருகிற 17-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தெற்கு மேற்கு தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.