இன்று தென் தமிழக மாவட்டங்களில் மழை ; நாளை 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குமாம்!!

 
rain

கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் ,திண்டுக்கல் ,தேனி ,விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ,கன்னியாகுமரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

நாளை மறுநாள் தென் தமிழக மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
வருகிற 24-ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  வருகிற 25ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்ட மாவட்டங்கள் ,புதுக்கோட்டை ,கடலூர் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். மீனவர்களுக்கான எந்த எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை.