மதுக்கடை, பார்கள் திறக்கப்படும் நேரம் மாற்றம் - டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு...

 
டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் இனி நிம்மதியா சரக்கடிக்கலாம்?!..

தமிழகத்தில் சாமாக் கடைகள் இனி வழக்கம்போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்டில் இருந்த போது,  மக்களை பாதுகாக்க மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அப்போது டாஸ்மாக் கடைகளும் முழுநேரம் மூடப்பட்டன. பின்னர் கொரோனா பதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

இதனையடுத்து டாஸ்மாக்  கடைகளும் திறக்கப்பட்டன. இருப்பினும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும்  என்பதால்,  து திறக்கப்படும் நேரம் அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வந்தன. அதன்படி  கடந்த ஜூலை மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தன. 

டாஸ்மாக் நேரம் குறைப்பு; தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் இனி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் வழக்கம்போல மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது . இந்த அறிவிப்பால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.