மே 01ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 
tasmac

மே தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வருகிற மே ஒன்றாம் தேதி மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட பொதுவிடுமுறை தினங்களில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவது வழக்கம். இதேபோல் தேர்தல் நேரங்களிலும், விடுமுறை விடப்படுவது உண்டு. மேலும் உள்ளூர் விடுமுறை மற்றும் ஒருசில பொதுவிடுமுறைகளுக்கு சில மாவட்டங்களுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும். விடுமுறை நாட்களில் தடையை மீறி யாராவது சட்டவிரோதமாக மது விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், மே தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வருகிற மே ஒன்றாம் தேதி மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மே தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ், சென்னையில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' கடைகளும், அனைத்து விதமான 'பார்'களும் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.