போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்கள்.. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த பள்ளிக்கல்வித்துறை..

 
பள்ளிக்கல்வித்துறை


ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,  நாளை (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.

பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட  10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.  ஜூலை 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில்,  பள்ளிக்கல்வித்துறை தரப்பில்  நாளை (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

ஆசிரியர்கள்

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதையேற்று பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையிலான பேச்சுவார்த்தை கூட்டம் நாளை (ஜூலை 25) நடைபெற உள்ளது.  இதில் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம். ஒரு சங்கத்தின் சார்பில் ஒருவர் மட்டுமேபங்கேற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.