காதலிப்பதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide


திருச்சி அருகே காதலிப்பதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக வனிதா கணவரை பிரிந்து குழந்தைகளும் வசித்து வந்தார். இந்த நிலையில், வனிதாவின் மூன்றாவது மகளான சவிதா(18), அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் தாய் வனிதாவுக்கு தெரியவந்த நிலையில், அவர் சவிதாவை கண்டித்து, காதலை கைவிடும்படி கூறி உள்ளார். 

trichy

இதனால், சவிதா மனமுடைந்து காணப்பட்ட வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம், அவர் திடீரென வீட்டில் இருந்து மாயமாகினார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சவிதாவை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று காலை  கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சவிதா சடலமாக தொங்கினார். இதனை கண்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். 

தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தாய் வனிதா அளித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலிப்பதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.