கொதிக்கும் வெந்நீரை ஊற்றி, இரும்பு கம்பியால் பெண்ணை தாக்கிய கொடூரம்

 
ko

சொத்துப் பிரச்சனையால் இளம்பெண் மீது வெந்நீரை ஊற்றி இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியதில் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  வெந்நீரை ஊற்றிய பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 குடவாசல் அடுத்த வேம்பனூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.   இவரது மனைவி அருள்செல்வி.   செந்தில்குமாரின் அண்ணன் ஜெய்சங்கர்.  அவரது மனைவி பத்மாவதி.  அருள் செல்வி தனது கணவர் செந்தில்குமார் மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வருகிறார்.     இவர்கள் வீட்டிற்கு அருகிலேயே ஜெய்சங்கர் குடும்பமும் வசித்து வந்துள்ளது.

ghh

 பூர்வீக சொத்து சம்பந்தமாக அடிக்கடி இரு குடும்பத்திற்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.   இந்த நிலையில் சம்பவத்தன்று  செந்தில்குமாரின் அண்ணன் மனைவி பத்மாவதி தனது மாமனாரிடம் எங்களுக்கு உரிய இடத்தைப் பிரித்துக் கொடுங்கள்.  நாங்கள் வேலி வைக்கவேண்டும் என்று சொல்லிக் கேட்டிருக்கிறார்.  இதை காதில் வாங்கிவிட்ட அருள்செல்வி,   எல்லா இடத்தையும் வாங்கிக்கொள்ள பார்க்கிறீயா? என்று கேட்டிருக்கிறார்.

 அதற்கு பத்மாவதி,  உனக்கு என்ன.. என் மாமனாரிடம் எங்களுக்கு உரிய இடத்தை நாங்கள் கேட்கிறோம்.  இதில் உனக்கு என்ன? என்று தகாத வார்த்தையில் திட்டி இருக்கிறார்.  இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.   

 அருள் செல்வியும் பத்மாவதியும் மாறி மாறி தகாத வார்த்தையால் திட்டி கொண்டிருந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் வீட்டிற்குள் ஓடிய பத்மாவதி,   கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை எடுத்து வந்து அருள் செல்வி மீது ஊற்றி இருக்கிறார்.   இது செல்வியின் வலது கையை வலது கை கால் , முதுகு ஆகிய இடங்களில் பலத்த காயம் பட்ட அலறி துடித்திருக்கிறார்.

 அப்போதும் பத்மாவின் கணவர் ஜெய்சங்கர்,  செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு இரும்பு கம்பியால் தோள்பட்டையில் கடுமையாக தாக்கி இருக்கிறார். பத்மாவதியின் அம்மாவும் அருள்செல்வியின்  முகத்தில் கடுமையாகத் தாக்கி இருக்கிறார்.

 பாதிக்கப்பட்ட அருள்செல்வி குடவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   இது குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மாவதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   மேலும் பத்மாவதியின் கணவரிடமும் பத்மாவதியின் தாயாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.