பிரச்சாரத்திற்கு இடத்தை இறுதி செய்த தவெக!
சேலத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான தேதி முடிவாகும் முன் தவெக நிர்வாகிகள் இடத்தை இறுதி செய்துள்ளனர்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை துவங்க உள்ளதாகவும் , வரும் டிசம்பர் நான்காம் தேதி சேலத்தில் கூட்டத்தில் பங்கேற்கொள்ளதாகவும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. ஆனால் சேலத்தில் டிச.4ம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்ள சீலநாயக்கன்பட்டி, போஸ் மைதானம், கோட்டை மைதானம் ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அனுமதி தரவேண்டுமென தவெகவினர் அனுமதி கோரியிருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்தது. டிச.3ம் தேதி கார்த்திகை தீபம், டிச.6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால், டிச.4ம் தேதி தவிர மற்ற தேதிகளில் அனுமதி அளிக்க தயார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவில் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை குறிப்பிடப்படாமல் உள்ளதாகவும், அதை குறிப்பிட்டால் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான தேதி முடிவாகும் முன் தவெக நிர்வாகிகள் இடத்தை இறுதி செய்துள்ளனர். சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் 10 ஏக்கரில் நிலத்தை தேர்வு செய்து அளவிடும் பணி நடந்து வருகிறது


