அண்ணாமலை வீட்டின் முன் இருந்த கொடிக்கம்பம் அகற்றம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பு இருந்த பாஜக கொடி கம்பம் நள்ளிரவில் தமிழக போலீசாரால் அகற்றப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் கிரேன் மூலம் அகற்றப்பட்ட நிலையில் தகவலறிந்து அண்ணாமலை வீடு முன்பு குவிந்த பாஜக தொண்டர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
சென்னை அருகே உள்ள பழைய ஊரில் உள்ள அண்ணாமலையின் வீட்டில் நெடுஞ்சாலைத்துறை அனுமதி வாங்காமல் கொடிக்கம்பம் வைத்ததாக தெரிகிறது. அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜகவினருக்கும் அப்பகுதியில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து சம்பவத்திற்கு வந்த போலீசார் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம்பேச்சுவார்த்தை நடத்தியதுடன் கொடி கம்பத்தை அகற்றினர். இதனால் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பாஜகவினர் அதிரடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.