வேலை போச்சு... கையில் பணம் இல்லை...கடைசியில் இந்த வேலையில் இறங்கிய ஐடி பெண்...!

 
1

பூட்டி இருக்கும் வீட்டை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சத்தமும் இல்லாமல் எப்படி எளிதாக திறக்கலாம் என்பது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது அந்த வீடியோவில் பூட்டப்பட்டிருந்த பூட்டில் மண்ணெணையை ஊற்றி தீயை பற்ற வைத்து சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு கல்லை வைத்து அந்த பூட்டை லேசாக தட்டினால் அந்த பூட்டு திறந்து விடுகிறது நினைத்து பாருங்கள் இந்த முறையை அனைவரும் தற்போது உபயோகப்படுத்தினால் எப்படி நாம் நிம்மதியாக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று வர முடியும்?, இதற்காக சில வீட்டில் ஒரு உயர்ந்த பொருளை வாங்கி வைப்பதற்கே யோசனை செய்து வருகிறார்கள்! சரி வீட்டில் தான் இது போன்று திருட்டுகள் நடக்கிறது என்றால் பெரிய பெரிய நிறுவனங்களிலும் மருத்துவமனைகளிலும் வங்கிகளிலும் திருமணம் மண்டபங்களிலும் கல்லூரி விடுதிகளிலும் பொது விடுதிகளிலும் திருட்டுகள் நடந்து வருவது அதிர்ச்சியை அளிக்கிறது . அதுமட்டுமின்றி வேலை இழந்த பல இளைஞர்கள் கூட இந்த திருட்டு தற்போது இறங்கி வருகின்றனர் என்ற செய்தி வெளியாகி வருவது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது, ஏனென்றால் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் சில இளைஞர்கள் இப்படி திருட்டுப்பக்கம் திரும்பினால் அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?? இப்படி ஒரு அதிர்ச்சிகர கேள்வியை முன் வைக்கிற வகையில் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 

26 வயதான ஜெசி அகர்வால் நொய்டாவை சேர்ந்தவர் அவர் தனது படிப்பை முடித்த பிறகு பெங்களூருவில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்பொழுது கொரோனா காலகட்டத்தின் சமயத்தில் அவருக்கு வேலை பறிபோய் உள்ளது. இதனை அடுத்து வேறு வேலைகள் பார்ப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார் இருப்பினும் இவருக்கு வேறு வேலைகளே கிடைக்காத காரணத்தினால் லேப்டாப்களை திருடி விற்று அதன் மூலம் வருமானத்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்து பெங்களூருவில் பணியாற்றி வரும் பெண்களின் விடுதிகளில் தங்கி தொடர்ந்து அந்த விடுதிகளில் பெண்கள் பயன்படுத்தும் லேப்டாப்புகளை திருடி விற்று வந்துள்ளார்.  

இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்ததால் இந்த திருட்டை தொடர்ந்த ஜெசி ஒவ்வொரு விடுதியாக சென்று ஆளில்லாத அறைகளுக்குள் நுழைந்து அங்கு சார்ஜ் போட்டு இருக்கும் லேப்டாப்புகளை திருடி வந்துள்ளார் இதனை அடுத்து இப்படி தொடர்ச்சியாக தங்கும் விடுதிகளில் லேப்டாப் திருடப்படுகிறது என காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது, இந்த புகாரை அடுத்து விசாரணை தொடங்கிய பிறகுதான் ஜெஸ்ஸியின் கைவரிசை அம்பலமாகியுள்ளது. மேலும் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள  24 லேப்டாப்புகளை போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.