வரும் 21ம் தேதி கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும்- நித்யானந்தா

 
நித்தியானந்தா இருக்குமிடம் தெரிந்தது! வீடியோவால் மாட்டிக்கொண்ட நித்தி….

ஹிந்துக்களுக்கான தனி நாடாக ‘கைலாசா நாடு’ உருவாக்கியதாக அறிவித்திருந்த நிலையில், அந்த நாடு எங்கிருக்கிறது என வரும் 21ம் தேதி அறிவிப்பதாக நித்யானந்தா கூறியுள்ளார்.

e

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து  புகழ்பெற்றார். அவர் தற்போது ஈக்வடார் அருகே ஒரு சிறிய தீவில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருக்கிறார் என்று அவரே அறிவித்தார். அதற்கு , ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஷ்’ என்று பெயரிட்டுள்ளார்.  இதையடுத்து கைலாசா நாட்டின்  குடியுரிமைக்கு அழைப்பு விடுத்தார்.  கைலாசாவை அதிகாரப்பூர்வமாக தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் வேண்டுகோள் விடுத்திருந்தார் நித்தியானந்தா. ஆனால் அதனை ஐநா நிராகரித்தது. கைலாசாவில் இ குடியுரிமை பெறுவதற்காக https://kailaasa.org/e-citizen/என்ற சிறப்பு இணையதளமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் கைலாசா திறக்கப்பட்டு உள்ளது, வருகிற 21ம் தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம் என நித்யானந்தா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.