எதிர்கட்சிகளின் கூட்டம் பாஜகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கு.. இது காவிரி பிரச்சனைக்கான கூட்டமல்ல - முதல்வர் மு.க.ஸ்டாலின்..

 
எதிர்கட்சிகளின் கூட்டம் பாஜகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கு.. இது காவிரி பிரச்சனைக்கான கூட்டமல்ல - முதல்வர் மு.க.ஸ்டாலின்..

எதிர்கட்சிகளின் கூட்டம் பாஜகவை எரிச்சலடைய செய்திருப்பதால் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

பெங்களூருவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜகவின் ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து,  ஏற்கனவே பிஹார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி சில முக்கிய முடிவுகளை எடுத்தோம்.  அதை தொடர்ந்து இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய கூட்டம் நடைபெற இருக்கிறது.  அந்த கூட்டத்தில் 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.   பீகாரிலும் தொடர்ந்து,  கர்நாடகாவிலும் பிஜேபியை வீழ்த்துவதற்காக தொடர்ந்து கூட்டப்படக்கூடிய கூட்டம் பிஜேபி ஆட்சிக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

modi

 அதனுடைய வெளிப்பாடு தான் அமலாக்கத்துறை இன்றைக்கு அவர்களால் ஏவவிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே வட மாநில பகுதிகளில் இந்த வேலையை செய்து கொண்டிருந்தவர்கள் தற்போது தமிழ்நாட்டில் அந்த பணியை தொடங்கி இருக்கிறார்கள்.  ஆக அதை பற்றி எல்லாம் சிறிதும் திராவிட முன்னேற்ற கழகம் கவலைப்படவில்லை.  இன்றைக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இல்லத்தில் அமலாக்க துறையின் மூலமாக சோதனை நடத்தப்படுகிறது. இந்த வழக்கை பொறுத்தவரையில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது புனையப்பட்ட பொய் வழக்கு. ஏறக்குறைய 13 ஆண்டு காலத்திற்கு முன்பு போடப்பட்ட வழக்கு.   தொடர்ந்து பத்து ஆண்டு காலம் அதிமுக தான் ஆட்சியில் இருந்திருக்கிறது.  அப்போதெல்லாம் இதைப்பற்றி எந்த முயற்சியிலும் அவர்கள் ஈடுபடவில்லை.  அண்மையிலே கூட பொன்முடி அவர்கள் மீது தொடரப்பட்டிருந்த கடந்த கால ஆட்சியில் சுமத்தப்பட்டிருந்த இரண்டு வழக்குகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.  ஆகவே இந்த வழக்கை பொறுத்தவரையில் சட்டரீதியாக அவர் சந்திப்பார்.

எதிர்கட்சிகளின் கூட்டம் பாஜகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கு.. இது காவிரி பிரச்சனைக்கான கூட்டமல்ல - முதல்வர் மு.க.ஸ்டாலின்..

 எது எப்படி இருந்தாலும் வர இருக்கக்கூடிய  டாளுமன்ற தேர்தலை பொருத்தவரையில் இதற்கெல்லாம் நிச்சயமாக மக்கள் பதில் வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.  ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் பீகாரிலும்,  கர்நாடக மாநிலத்திலும் இதை தொடர்ந்து இன்னும் பல மாநிலங்களிலும் நடைபெற இருக்கக்கூடிய இந்த எதிர்கட்சிகளின் கூட்டத்தின்  நோக்கத்தை திசை திருப்புவதற்காக அவர்கள் செய்து கொண்டிருக்கக் கூடிய தந்திரம்.   இதையெல்லாம்  எதிர்கட்சிகளாக இருக்கக்கூடிய நாங்கள் சமாளிப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

ஏற்கனவே தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை ஆளுநர் எங்களுக்காக நடத்திக் கொண்டிருக்கிறார்.  இப்போது அமலாக்கதுறையும் சேர்ந்திருக்கிறது.  ஆகவே தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இவையெல்லாம் திசைத்திருப்பதற்காக செய்யப்படக்கூடிய நாடகம்.  அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  காவிரி மற்றும் மேகதாது பிரச்சனை பொறுத்தவரையில் அன்றைக்கு கலைஞரின் பணியில் இருந்து சிறிதும் நழுவாமல் தாங்கள் தொடர்ந்து அதை கடைபிடிப்போம். இந்த கூட்டம் என்பது மத்தியில்  இருக்கக்கூடிய பாஜகவை அப்புறப்படுத்துவதற்காக நடத்தக்கூடிய கூட்டம்.  காவிரி பிரச்சனைக்காக நடத்தக்கூடிய கூட்டம் அல்ல. இந்தியாவிற்கே ஆபத்து வந்திருக்கிறது அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுகிறது தவிர வேறு காரணம் அல்ல.” என்று கூறினார்.