கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும் - கரு.நாகராஜன் தகவல்

 
karu

கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று  கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

tn

சமீபத்தில்  அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி வைக்கப் போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதிமுக முன்னாள் அமைச்சரும்,  எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதன்,  அதிமுகவின் வெற்றிக்கு தடையாக இருந்த பாஜக நீக்கப்பட்டுள்ளது. அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டியான அண்ணாமலை கூட்டணியை கூட பாராமல் தலைவர்களை தொடர்ந்து விமர்சித்தார். தன்னை தானே விளம்பரப்படுத்தும் ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி தான் அண்ணாமலை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன்  பாஜகவின் கொள்கைகள் மீது அதிமுகவுக்கு எப்போதும் உடன்பாடு இல்லை அதிமுகவின் தயவு இல்லாமல் பாஜகவால் வெல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்

karu nagarajan bjp

இந்நிலையில் அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தடையாக இருந்தது என்ற நத்தம் விஸ்வநாதன் கருத்து குறித்த கேள்விக்கு, “இதுநாள் வரை அந்த தடை தெரியவில்லையா” என பாஜக தலைமை நிர்வாகி கரு.நாகராஜன் பதிலளித்துள்ளார். கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும். அதற்கு கட்டுப்படுவோம்  என்றும் அவர் கூறியுள்ளார்.