'நமது புரட்சித் தொண்டன்' என்ற பெயரில் நாளிதழ் தொடங்கிய ஓபிஎஸ் அணி

 
tn

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நமது 'புரட்சித்  தொண்டன்' என்ற பெயரில் நாளிதழ் அறிமுகம் செய்யப்பட்டது.

op

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி,  கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.   சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் தினகரனை  சந்தித்து அவருடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்தார்.  அத்துடன் கோடநாடு கொலை வழக்கு விசாரணை விரிவுபடுத்த வலியுறுத்தி  ஓபிஎஸ்  மற்றும் தினகரன் கூட்டாக இணைந்து போராட்டம் நடத்தினர். இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 'நமது புரட்சித் தொண்டன்' நாளிதழை தொடங்கிறார் என்று சமீபத்தில் செய்தி வெளியானது.


tn

இந்நிலையில் அதிமுக தரப்பில் நமது அம்மா என்ற நாளிதழ் வெளியாகி வரும் நிலையில் அதற்கு போட்டியாக ஓ பன்னீர்செல்வம் அணி சார்பில் நமது புரட்சி தொண்டன் என்ற நாளிதழ் தொடங்கப்பட்டுள்ளது.  சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில்  நடந்த நிகழ்ச்சியில் முதல் பிரதியை மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட்டார்.