இலவச திருமணத்திற்கான திட்டச்செலவு தொகை ரூ. 50,000 ஆக உயர்வு - தமிழக அரசு அரசாணை..

 
திருமணம்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை, ₹20,000 லிருந்து ₹50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் “இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.
 
1.அரசாணையில் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவினை ரூ.15,000/-லிருந்து ரூ.20,000/- ஆக உயர்வு செய்தும், ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தவும் இதற்கு தேவைப்படும் மொத்த செலவின தொகை ரூ.1,00,00,000/- திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டது.

தமிழக அரசு

2. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், 04.12.2022 அன்று சென்னை-1 மற்றும் சென்னை-2 இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது என்றும், மேலும், மேற்படி 31 இணைகளையும் சேர்த்து 20 இணை ஆணையர் மண்டலங்களில் 217 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன என்றும், இந்நிலையில் சட்டமன்ற அறிவிப்பின்படி இன்னும் 283 இணைகளுக்கு திருக்கோயில் மூலம் இலவசத் திருமணம் ஏழை எளிய வைக்கப்படவுள்ளதென்றும், திருகோயில்கள் மூலம் இலவசத் திருமணம் நடத்துவதற்காக மேலே நடத்தி முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவான ரூ.20,000/- தொகையினை ரூ.50.000/-ஆகஉயர்த்தி, கீழ்க்கண்ட திட்ட விவரப்படி திருக்கோயில் நிதிமூலம் செலவினம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்குமாறு ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்;- 

ஸ்டாலின்

திட்ட விவரம்

திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம் : ரூ.20,000/-
மணமகன் ஆடை:ரூ.1000/-
மணமகள் ஆடை: ரூ.2000/-
திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு : ரூ.2000/-
மாலை, புஷ்பம் - ரூ.1000/-
பீரோ : ரூ.7,800
கட்டில்-1 : ரூ.7,500
மெத்தை : ரூ.2,200
தலையணை-2 : ரூ.190
பாய்-1 : ரூ.180
கைக்கடிகாரம்-2 : ரூ.1,000
மிக்ஸி-1 : ரூ.1,490
பூஜை பொருட்கள் + பாத்திரங்கள் வகையறா : ரூ.3,640
கூடுதல்      : ரூ.50,000/-

3. இந்துசமயஅறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசிலனை செய்தது. பரிசீலனைக்குப் பின்னர் அதனை ஏற்று.திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டசெலவினத் தொகை இயன்ற வரையில் உபயதாரர்கள் நிதி மூலம் நிலையில் நிதிவசதிமிக்க திருக்கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுவதாலும், திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20.000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.