அதிரடியாக ஏற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை..

 
gold


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹64 அதிகரித்து,  ஒரு சவரன்  ₹44,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

சென்னையில் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை உயர்வதும், சரிவதுமாக இருந்தாலும்,  சவரன் 44ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையாகி வந்தது. அந்தவகையில் நேற்று முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.144 அதிகரித்து , ஒரு சவரன் 44,000 ரூபாயை தொட்டது. கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,500க்கு விற்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று  தங்கம் விலை இன்று  மீண்டும் அதிரடியாக ஏற்றம் கண்டது. அதன்படி,  தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து, ஒரு சவரன் 44,296 ரூபாய்க்கு  விற்பனையாகிறது. அதேபோல்  கிராமுக்கு 37  ரூபாய் உயர்ந்து ஒரு கிராம்  5,537 ரூபாய்க்கும் விற்பனையானது.  வெள்ளி விலை நேற்று ஒரே நாளில் ரூ. 2.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.79.50க்கு விற்கப்பட்டது.

வெள்ளி

 இந்த நிலையில் 3வது நாளாக இன்றும்  தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.44,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து  ஒரு கிராம் தங்கம் ₹5,545-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் சில்லறை  வர்த்தகத்தில்  வெள்ளி விலை கிராமுக்கு  1 ரூபாய் 80 காசுகள் அதிகரித்து,  ஒரு கிராம் 81 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.81,300க்கு விற்கப்படுகிறது.