இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தியாகங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும் - ஓபிஎஸ்..

 
ops


திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தியாகங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர், வழக்கறிஞர்  என பன்முகத்தன்மை கொண்டவர் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன். இவர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் . இந்நிலையில் இன்று திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டி வருகின்றனர்.  

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தியாகங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும் - ஓபிஎஸ்..

அந்தவகையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பதிவில், “சமூக சீர்திருத்தவாதியும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவரும், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக திறம்பட பதவி வகித்தவரும், மது ஒழிப்பிற்காக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த பெருமைக்குரியவருமான திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு அவருக்கு எனது மரியாதையையும்,  வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் தியாகங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.