புயலை எதிர்க்கொள்ள தயார் நிலையில் இருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம்!
புயலை எதிர்கொள்ளும் வகையில் மின்வாரியத்தை பொறுத்தவரை தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார். அதில், மின்னகத்திற்கு வரும் அழைப்புகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் 2 3,00,000 மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன.மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ள இடங்களில் மின்சாரம் தடைபடாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு மையங்களில் மின்சாரத்துறை ஊழியர்கள் களப்பணியாற்ற உள்ளனர்
மழை நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்; பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 15,500 மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்; கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது என்றார்.