ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து ஆரம்பம் - ஈபிஎஸ் வாழ்த்து!!
ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து ஆரம்பம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும் நிலையில் அதன் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் எம்எல்ஏ தென்னரசு 2001 தேர்தல் மற்றும் 2016 தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும்
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) February 1, 2023
வெற்றி வேட்பாளர் திரு.கே.எஸ்.தென்னரசு,அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து ஆரம்பம்...!@AIADMKOfficial pic.twitter.com/hDaG34ZVZU
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும்
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) February 1, 2023
வெற்றி வேட்பாளர் திரு.கே.எஸ்.தென்னரசு,அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து ஆரம்பம்...!@AIADMKOfficial pic.twitter.com/hDaG34ZVZU
இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு.கே.எஸ்.தென்னரசு,அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து ஆரம்பம்...! என்று பதிவிட்டுள்ளார்.