இன்று 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் ....
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மேலும் டிசம்பர் 15ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் தகவல் தெரவித்துள்ளது.