‘மு.க.ஸ்டாலின் - வி.பி.சிங்’ இடையே ஒரு வித்தியாசம் தான்.. வாழ்த்து செய்தியில் அன்புமணி தகவல்..

 
anbumani anbumani

 தமிழக ஆட்சியாளர்களின் சமூகநீதி கண்களை வி.பி.சிங்கின் ஆன்மா திறக்கட்டும்! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

வி.பி.சிங்கின் 95வது பிறந்தநாளையொட்டி  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூகநீதிக்கான பெருந்தலைவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 95-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புகளையும் மீறி செயல்படுத்தியதற்காக  நாமும், நமது பல தலைமுறையினரும் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.  அவரது பிறந்தநாளில் அவரது சமூகநீதிப் பார்வையையும், அதற்காக அவர் செய்த தியாகங்களையும் நினைவு கூர்ந்து அவரை வணங்குகிறேன்.

 ‘மு.க.ஸ்டாலின் - வி.பி.சிங்’ இடையே ஒரு வித்தியாசம் தான்.. வாழ்த்து செய்தியில் அன்புமணி தகவல்.. 

வழக்கமான ஆட்சியாளர்களுக்கும், வி.பி.சிங் அவர்களுக்கும் இடையிலான வேறுபாடு இமயத்தை விட பெரிதானது. சுருக்கமாகக் கூற வேண்டுமானால், தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமூக நீதியை பலி கொடுப்பவர்கள்; ஆனால்,  பெருந்தகை வி.பி.சிங் அவர்களோ சமூகநீதியைக்  காப்பதற்காக ஆட்சியைப் பலி கொடுத்தவர். அதனால் தான் அவரது தியாகம் மிகப்பெரியது ஆகும்.

Image

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில், மக்கள்தொகைக்கு இணையான அளவில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். தேசிய அளவில்  அது சாத்தியமாவதற்கு  மத்திய அரசு விரைவில் நடத்தவிருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு வகை செய்யக்கூடும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களுக்கு அது குறித்த பார்வையே இல்லாததால் அதற்கான வாய்ப்புகளே தென்படவில்லை. சமூகநீதி நாயகன் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளில் அவரது ஆன்மா தமிழக ஆட்சியாளர்களின் சமூகநீதிக் கண்களை திறக்க வகை செய்யட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.