பொன்முடியின் சொத்துகளை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை!!

 
tn

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகள் முடக்கத்தை விசாரணை நீதிமன்றம் நீக்கியதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மனு - “சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் தற்போது அதை மாற்ற முடியாது” என உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Ponmudi

▪️ 2006-11 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து அவரது சொத்துகளையும் முடக்கியது

▪️ 2016ம் ஆண்டு வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து, சொத்துகள் முடக்கத்தையும் விழுப்புரம் நீதிமன்றம் நீக்கியது

▪️ இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தனித்தனியே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது

Ponmudi

▪️ வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு நேற்று 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த, உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சொத்துகளை முடக்கக்கோரிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்கினார்

▪️ “சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை.  தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என தீர்ப்பளித்துள்ளார்.