இந்த 2 நாட்கள் பொது விடுமுறை : தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!!

 
govt

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு  ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளை மற்றும் வருகிற 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியல், வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட பணிகளை முடித்து, பரப்புரையிலும் ஈடுபட்டன. 

election

நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. 9 மாவட்டங்களில் 78 மாவட்ட கவுன்சிலர்கள், 755 ஒன்றிய கவுன்சிலர்கள் ,1577 கிராம ஊராட்சி தலைவர்கள் ,12252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 9 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் நடைபெறவிருக்கும்  தற்செயல் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதியில் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

cm stalin

முன்னதாக  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில்  9 மாவட்டங்களிலும் 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.