கி.வீரமணிக்கு திருமா நேரில் வாழ்த்து

 
tn

தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ள கி .வீரமணிக்கு திருமாவளவன்  நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

tn

தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும்,திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி. வீரமணி அவர்களுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. "தகைசால் தமிழர்"விருதிற்குத்தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர். கி. வீரமணிக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில்,  "தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருதுக்குத் தமிழர் தலைவர் அய்யா  கி.வீரமணி  அவர்களைத் தேர்வு செய்திருப்பது பெருமகிழ்வை அளிக்கிறது.சற்று முன் அய்யா அவர்களைச் சந்தித்து விசிக சார்பில் ஆடை போர்த்தி வாழ்த்தினோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.