டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்- திருமாவளவன்

 
திருமா

செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்த நாள் அன்று விசிக சார்பில் "பூரண மதுவிலக்கை வலியுறுத்தி " மகளிர் மாநாடு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thirumavalavan


மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “மேலவளவில் ஊராட்சி தலைவராக தலித் வந்ததால் 1997 ல் படுகொலை நடந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என மேலவளவில் பலியான சம்பவத்தின் நினைவு தினம் இன்று. பலியானவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி  போதிய இழப்பீடு வழங்க வேண்டும். கள்ளச்சாராய, நச்சுச்சாராய சாவு இந்தியா முழுமையும் உள்ளது. இதற்கு தீர்வு பூரண மது விலக்கு.

டாஸ்மாக் கடையிலும் பாதிப்பு உள்ளது. ஆகவே தேசிய அளவில் மது விலக்கு கொள்கை அமல்படுத்த வேண்டும். மெத்தானால் மாபியா கும்பலை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். தமிழக அரசு முதலில்  படிபடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கள்ளக்குறிச்சி விசசாராய மரணத்தை நேரில் சென்றபோது அங்குள்ள மக்கள் கூறியது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தான்... மாண்புமிகு முதல்வர் அவர்கள் டாஸ்மாக் கடையை மூடினால் மக்ககளிடம் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும்.பூரண மது விலக்கை ஆதரித்து விசிக சார்பில் பெரியார் பிறந்த நாள் அன்று விசிக சார்பில் மிகப் பெரிய மகளிர் மாநாடு நடை பெற உள்ளது. கள் விற்பனை, டாஸ்மாக் மது உட்பட எந்த வகை மதுவும் வேண்டாம்.

Thol. Thirumavalavan Press Meet at Chennai

மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான், ஆனால் பூரண மது விலக்கு என்பதே தீர்வு. நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை உண்மைக்கு மாறான உரை. அவர்கள் பெரும்பான்மை பெற்றதாக கூறுவது தவறு. கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட 63 இடங்கள் குறைவாக தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது. ஆயோத்தி கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்து உள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவும் ஒரு தலைபட்சமாக சார்பாக செயல்படுகிறார். தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. மாணவர்கள் நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூறியதாகவே நான் கருதுகிறேன் ” என்றார்.