ரெட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளில் சனாதனத்தை வேரறுப்போம் - திருமாவளவன்

 
thiruma

ரெட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளில் சாதி ஒழிப்பை முன்னிறுத்தி சனாதனத்தை வேரறுப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்  அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர்.  ஆதி தமிழர் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் (இதழ்) என்ற மாத இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர். இரட்டைமலை சீனிவாசன் கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதாக சீனிவாசன் கருதினார். அறவே கடையை மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929-இல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக்கொண்டது. ஆலய நுழைவுத் தீர்மானம்,  ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு,  இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பு என புதிய சரித்திரம் படைத்த இவர்  1945  ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி 86ஆம் வயதில் காலமானார்.


இந்நிலையில், ரெட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளில் சாதி ஒழிப்பை முன்னிறுத்தி சனாதனத்தை வேரறுப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரின் பிறந்தநாளான இன்று (சூலை -07) சாதி ஒழிப்பை முன்னிறுத்தி சனநாயக சக்திகளை அணிதிரட்டுவோம். சனாதனத்தை வேரறுப்போம்.பறையன் எனும் பெயரில் அமைப்பும் இதழும் தொடங்கி நடத்தியவர் எனினும் சாதி ஒழிப்பே அவரது இறுதி இலக்காகும். இதனை எய்திடவே இவர் புரட்சியாளர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். அவர் கனவை நனவாக்க இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.