போலீசாரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஹெராயின், கஞ்சா சாக்லெட் தீயிட்டு எரிக்கப்பட்டது!

 
kanja kanja

போதையில்லா தமிழ்நாடு முயற்சியின் ஒரு பகுதியாக,  2215.71 கி.கி உலர்கஞ்சா, 58 கி.கி சாராஸ், 1 கி.கி ஹெராயின், 1.4 கி.கி கஞ்சா சாக்லெட் போன்ற போதைப்பொருட்கள் அனைத்தும் எரிக்கப்பட்டது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், போதையில்லா தமிழ்நாடு முயற்சியின் ஒரு பகுதியாக, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் மனமயக்கப்பொருட்களை அழிக்கும் பணி, தமிழ்நாடுபோதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 17.04.2025 அன்று 187 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2215.71 கி.கி உலர்கஞ்சா, 58 கி.கி சாராஸ், 1 கி.கி ஹெராயின், 1.4 கி.கி கஞ்சா சாக்லெட் போன்ற போதைப்பொருட்கள் அனைத்து சட்ட முறைகளையும் பின்பற்றி செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எரிக்கும் ஆலையில் எரிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுநாள் வரை 253 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3628.71 கி.கி உலர் கஞ்சா, 74.150 கி.கி ஹசிஷ், 58 கி.கி சாராஸ், 1 கி.கி ஹெராயின், 1.4 கி.கி கஞ்சா சாக்லெட்கள் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவினரால் எரிக்கப்பட்டது.  

காவல்துறை தலைவர். குற்றம், காவல் கண்காணிப்பாளர், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, சென்னை, மற்றும் உதவி இயக்குநர், தமிழ்நாடு தடய அறிவியல் பிரிவு, சென்னை ஆகியோர் போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருள்களை அழிக்கும் செயல்முறையை கண்காணித்தனர். போதைப்பொருள்கள் மற்றும் போதைப்பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி உதவி எண். 10581 மூலம் மற்றும் வாட்ஸ்அப் எண். 9498410581 அல்லது மின்னஞ்சல் முகவரி spnibcid@gmail.com மூலம் பகிருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.