பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்காததற்கு இது தான் காரணம் - அண்ணாமலை..

 
Annamalai


பிரதமர் மோடி விழாவில் பங்கேற்காதது ஏன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு தினமான இன்று  ( ஏப்ரல் 14) திமுக சொத்து மற்றும் ஊழல் பட்டியலை  வெளியிடுவதாக பாஜக அண்ணாமலை அறிவித்தார். அதன்படி இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டார்.  அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்,  பிரதமர் மோடி சென்னை வந்தபோது அவருடன் ஏன்? பங்கேற்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.  

modi annamalai

அதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, “நான் சென்னை வரும்போது நீங்கள் வரவேண்டாம், கர்நாடக தேர்தல் பணிகளை கவனியுங்கள் என பிரதமர் மோடி கூறினார்.   அதனால் தான் சென்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.  தினந்தோறும் பார்ப்பதால் தமிழ்நாட்டில் வைத்து பிரதமர் மோடியை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்று  கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024-ம் ஆண்டுக்குள் வெளியிடப்படும். ஊழலை எதிர்க்க ஆரம்பித்தால் ஒருகட்சியை மட்டும் எதிர்க்க முடியாது; மொத்தமாக எதிர்க்க வேண்டும்.  தலைவராக இருக்கும்வரை இப்படிதான் செயல்படுவேன். யார் தவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியம் எனக்கவில்லை. என்னை மாற்ற நினைத்தால் டெல்லிக்கு சென்று என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள். ஊழலுக்கு எதிராக ஜூலையில் "என் மண், என் மக்கள்" என பாதயாத்திரை நடைபெற உள்ளது” என்றார்.