தூத்துக்குடி கோரம்பளம் குளம் உடைந்தது - நகருக்குள் செல்லும் வெள்ளம்!

 
tn

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தில் உள்ள குளம் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது

தென் இலங்கை பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை காரணமாக அனைத்து  பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று(டிச.18) பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தில் உள்ள குளம் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த வெள்ள நீர் அருகிலுள்ள கிராமத்திற்குள் புகுந்து வருகிறது. மேலும் தூத்துக்குடி நகரை நோக்கியும் அந்த வெள்ளநீர் செல்கிறது. இதனால் தூத்துக்குடி நகருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.