திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை தொடக்கம்

 
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் & திருக்கல்யாணம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர். இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்திய மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கூட ஏராளமானோர் வந்து செல்கின்றனர். திருச்செந்து முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து செய்வார்கள். 

திருச்செந்தூர் முருகன் கோயில்

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது. நாளை காலை யாக சாலை பூஜையுடன் திருவிழா தொடங்குகிறது. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 18ம் தேதி நடைபெறவுள்ளது. கந்த சஷ்டி விழாவின் முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.