திருப்பூர் கொடிகாத்த குமரன் நினைவு தினம் - ஓபிஎஸ், அண்ணாமலை ட்வீட்
திருப்பூர் கொடிகாத்த குமரன் நினைவு தினத்தையொட்டி ஓபிஎஸ், அண்ணாமலை அவரது நினைவை போற்றியுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், தேச விடுதலைக்காக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, தேசியக் கொடியைக் காக்க, இளம் வயதிலேயே தமது இன்னுயிரைத் தியாகம் செய்த, திருப்பூர் கொடிகாத்த குமரன் அவர்கள் நினைவு தினம் இன்று.
திருப்பூர் குமரன் அவர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம். அவர் முதலான தியாகிகள் தங்கள் உயிர் கொடுத்துப் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்.என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று அவருக்கு எனது வீர வணக்கத்தினையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன். அவரது தியாகம் இந்தப் பூமி உள்ளவரை என்றென்றும் நிலைத்து நிற்கும்.
— O Panneerselvam (@OfficeOfOPS) January 11, 2024
இன்று அவருக்கு எனது வீர வணக்கத்தினையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன். அவரது தியாகம் இந்தப் பூமி உள்ளவரை என்றென்றும் நிலைத்து நிற்கும்.
— O Panneerselvam (@OfficeOfOPS) January 11, 2024
அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , இளம் பருவம் முதலே தேசப்பற்று மிக்கவராக திகழ்ந்து, காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தேசப் பற்றோடு பங்கேற்று, தன் உயிரை தாய் நாட்டிற்காக தியாகம் செய்த திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது வீர வணக்கத்தினையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன். அவரது தியாகம் இந்தப் பூமி உள்ளவரை என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.