திருப்பூர்: 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி உயிரிழப்பு

 
tn

உடுமலை அமராவதி வனச்சரகத்தில் புலி ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tn

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை அடுத்துள்ள அமராவதி வனச்சரகத்தில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று  உயிரிழந்தது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி அணை இரண்டு வனசரகங்கள் உள்ளன.  இங்கு புலி, சிறுத்தை, கரடி, யானை, மான்கள், காட்டுமாடு, அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.  அமராவதி வன சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது  புலி ஒன்று வாயில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
tn

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது ஒன்பது வயதுடைய ஆண் புலி என்பது தெரிய வந்தது.  புலியின் வாயில் காயங்கள் இருப்பதால் வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்டதா? இயற்கையாக உயிரிழந்ததா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  அத்துடன் புலியின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதிகாரிகள் இதற்கான இறுதி முடிவு எடுப்பார்கள்.  உடலில் காயங்கள் இல்லாமல் மர்மமான முறையில் உயிரிழந்த புலியின் உயிர் இழப்பிற்கு வனத்துறையினர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.