தி.மலை தீபத்திருவிழா டிக்கெட் நாளை விற்பனை

 
tiruvannamalai deepam

திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி  டிக்கெட் நாளை விற்பனை செய்யப்படுகிறது.

tiruvannamalai

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும்  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்  திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற  நவம்பர் 26- ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

ynt

இந்நிலையில் திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பரணி, மகா தீப தரிசனத்திற்கான டிக்கெட் நாளை (24.11.2023) முதல் விற்பனை செய்யப்படுகிறது. காலை 4 மணிக்கு நடைபெறும் பரணி தீபத்தைக் காண ரூ.500 கட்டணத்தில் 500 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும். மாலை  6 மணிக்கு மகா தீபத்தைக் காண ரூ.600 கட்டணத்தில் 100 பேருக்கும், ரூ.500 கட்டணத்தில் 1,000 பேருக்கும் அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. அனுமதி சீட்டுகளை www.annamalaiyar.hrce.tn.gov என்ற இணையதளத்தில் நாளை காலை 10 மணி முதல் பெறலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.