திருவாரூர்: லாரி கவிழ்ந்து 2 பேர் பலி

 
tn

திருவாரூர் அருகே மேப்பலத்தில் கோழி ஏற்றி சென்ற லாரி கால்வாயில் கவிழ்ந்து இரண்டு பேர் பலியாகி உள்ளனர். கோழி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில் வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

accident

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரை சேர்ந்த நோபோ மஜி,  சௌடோ மஜி இவர்கள் தஞ்சாவூரில் தங்கி இருந்து மொத்த விற்பனை கோழிக்கடையில் ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.  நோபோ மஜிக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகளும், சௌடோ மஜிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும்  உள்ளனர். இந்த சூழலில் தஞ்சாவூரில் இருந்து சரக்கு லாரியில் கோழிகளை ஏற்றுக் கொண்டு காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்தனர். லாரியை கலையரசன் என்பவர் ஓட்டி வந்த நிலையில் மேற்பார்வையாளராக மணிகண்டன் என்பவர் உடனிருந்துள்ளார். 

Death

நோபோ மஜி,  சௌடோ மஜி இருவரும் லாரியின் மேல் பகுதியில் அமர்ந்திருந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் லாரி என்று அதிகாலை திருவாரூர் அருகே மேப்பலத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது .இதனால் தாறுமாறாக ஓடி கால்வாயில் குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வட மாநில தொழிலாளர்களான நோபோ மஜி,  சௌடோ மஜி  இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் . அத்துடன் ஓட்டுநர் கலையரசன் மற்றும் மேற்பார்வையாளர் மணிகண்டன் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த  கொரடாச்சேரி போலீசார் இறந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.