சட்டமன்ற நூற்றாண்டு விழா-கலைஞர் படத் திறப்பு விழா சிறப்பு மலர் வெளியீடு!!

 
tn

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு - முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப் படத்திறப்பு விழா சிறப்பு மலரை  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  வெளியிட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில்  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு சிறப்பித்தார்.  இந்த விழாவிற்கான சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வு இன்று சட்டமன்ற அரங்கில் நடைபெற்றது.  சிறப்பு மலரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார். சட்டமன்ற நூற்றாண்டு விழா கருணாநிதி திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் ,பிரதமர் ,முக்கிய தலைவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள் சட்டமன்றத்தில் சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன.

tn

அத்துடன் அண்ணா குடியாட்சி முறை என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும், புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாறு, மாப்பிள்ளையும் மாப்பிள்ளை தலைப்பில் அண்ணா கடந்த 1957ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஆற்றிய முதல் உரை ஆகியவை இந்த சிறப்பு மலரில் இடம் பெற்றுள்ளது, அத்துடன் தியாகத்தைப் போற்றுவோம் என்று 1972ஆம் ஆண்டு விடுதலை நாள் வெள்ளி விழாவில் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது,  அதேபோல் கடந்த ஆண்டு சட்டமன்ற ஜனநாயகம் பேணி காப்போம் என்ற தலைப்பில் உரையாற்றியது , 2012 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அருந்ததியர் சமுதாயம் சார்ந்த முதல் பேரவைத் தலைவர் தனபால் என்று அவரைப் பாராட்டி பேசியது ஆகியவை இடம்பெற்றுள்ளன.

tn

முன்னாள் முதலமைச்சர்கள் காமராசர் ,பக்தவச்சலம், எம்ஜிஆர் ஆகியோரின் உரைகளும், தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் குறித்த தீர்மானம் உட்பட சட்டத்தில் இடம் பெற்ற வரலாற்று சிறப்பு நிகழ்வுகளும், தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மலரில் இடம் பெற்றுள்ளது. அத்துடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள், சட்டங்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ,16வது சட்டப்பேரவையின் அமைச்சரவை தகவல்களும் சிறப்பு மலரில்  தொகுக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிடும் நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.